நிறப்பிரிகை

கதைகளுக்கும் ,கவிதைகளுக்கும் கூட நிறம் உண்டு என்பது என் நம்பிக்கை ;ஒவ்வொருகதையும் ,கவிதையுமே கூட ஏதோ ஒரு நிறத்தைப் பிரதிபலிக்கிறது என்பது நிஜம் ,எட்டாங்கிளாசில் ஹிஸ்டரி வாத்தியார் மேப் குறிக்கும் போது கடலுக்கு நீல நிறம் , நிலம் அல்லது தரைக்கு பிரவுன் நிறம் காடுகளுக்குப் பச்சை நிறம் என்று சொல்லித் தந்ததைப் போல கவிதைக்கும் நிறம் கண்டு பிடித்துக் குறிப்பிட்டால் சுவாரஷ்யமாக இருக்குமே என்று தோன்றியது ...இதோ சின்னதாக ஒரு முதல் முயற்சி ...

Friday, October 24, 2008

ஐப்பசி ஸ்பெஷல் அடைமழையா...அஸ்வினிதேவர்களா... காஸ் சிலிண்டர் தட்டுப்பாடா!!!?









என்னத்த சொல்லங்க ஊரெல்லாம் அடைமழை ; சைக்கிள் கேப்புல அடைமழை பத்தி ஒரு மேட்டர் சொல்லிக்கறேன் ... அது இன்னானா "ஐப்பசி அடைமழை " பழமொழி இருக்கில்ல இந்த ஐப்பசி மாசம் வருஷத்துல ஏழாவது மாசமா வருதுங்க . ஏழாம் நம்பர் அஸ்வினி தேவர்களைக் குறிக்குதாம் ...அதாகப் பட்டது என்னவெனில் ?
சிறு குறிப்பு :
சூரிய புத்திரர்களாகக் கருதப் படும் இந்த அஸ்வினி குமாரர்கள் எப்போதும் ஒன்றாகவே இருக்கும் இரட்டையர்கள் .மஹாபாரதத்தில் பாண்டுவின் இரண்டாவது மனைவி மாதுரி இந்த அஸ்வினி தேவர்களை பிள்ளை வரம் வேண்டிப் பிறகு பிறந்தவர்களே நகுலனும் ,சகாதேவனும் ...இருவரில் சகாதேவன் சோதிடத்திலும் நகுலன் குதிரைகளைப் பழக்குவதிலும் வல்லவர்கள் . அஸ்வினி புத்திரர்கலானதினாலேயே இவர்களுக்கு இந்தக் கலைகள் கை வந்தன என்கிறது இதிகாசமும் புராணமும் .
இந்த அஸ்வினி தேவர்கள் தம் தந்தையார் சூரிய பகவானின் பனிரெண்டு குதிரைகள் பூட்டிய தேரை ஓட்டும் சாரதிகளாகவும் இருப்பார்களாம் , இவர்களது பெயரால் ஐப்பசி மாதம் சமஸ்கிருத மொழியில் குறிக்கப் பெறுகிறது . சமஸ்கிருதத்தில் அஸ்வினா என்றால் தமிழில் ஐப்பசி என்கிறோம் . யாகங்கள் நடைபெறுகையில் அஸ்வினி தேவர்கள் வணங்கப் படுவதாக ரிக் வேதம் கூறுகிறது . அதோடு எனக்குத் தெரிந்த இன்னொரு செய்தி என்னவென்றால் இந்த அஸ்வினி குமாரர்கள் எந்நேரமும் உலகைச் சுற்றிக் கொண்டே இருப்பார்களாம் (அப்பா சூரியனாருக்கு தேர் ஒட்டியது போக...மாதுரிக்கு குழந்தை வரம் கொடுத்து பிறகும் எஞ்சிய நேரங்களில் ) சுற்றிக் கொண்டே இருப்பார்களாம் ;
அப்படி அவர்கள் நம்மில் யாரோ ஒருவரின் அருகில் வருகையில் நாம் என்ன மனதில் நினைக்கிறோமோ அது அப்படியே பலிக்கட்டும் என்று ஆஷிர்வதித்து (அதாவது நாம் நல்லது நினைத்தாலும் சரி கெட்டதும் நினைத்தாலும் சரி எதுவானாலும் நன்றாகக் கவனியுங்கள் கெட்டதும் கூடப் பலிக்கட்டும் என்று பாரபட்ச்சமின்றி ஆஷிர்வாதம் அளித்து விட்டுப் போய் விடுவார்களாம் !!!
இதை சமஸ்கிருதம் மிக எளிதாக "ததாஸ்து " என்று சொல்கிறது அதாவது "அப்படியே ஆகட்டும் "என்று பொருள் கொள்ளலாம் .
(இது வரமா ..சாபமா ...மண்டை கொடைச்சலாள்ள இருக்கு )
நல்லதை மட்டுமே எந்நேரமும் நினைச்சுட்டு இருக்க முடியுமா பிரதர் ?!
சிலநேரம் பக்கத்து வீட்டு பரசுராமன் பைக் எப்படா காணாமப் போகும் நு இருக்கும் ...!!!(அதெல்லாம் பலிக்குதா என்ன ? .....கொஞ்சூண்டாச்சும் பலிச்சிருக்குமோ ?
சரி மேட்டருக்கு வருவோம் ,
ஒண்ணுமில்ல இந்த அடைமழைல மின்வெட்டு ரொம்பப் பெரிய பிரச்சினையே இல்லைங்கற மாதிரி வீட்ல ஒரு விஷயம் நடந்து போச்சு .
எப்பவும் புக் பண்ணி ஒரு வாரத்துலயோ இல்ல ரெண்டுவாரத்துலயோ டெலிவரி
ஆகற காஸ் சிலிண்டர் இந்த தடவை இருபது நாளாகியும் வரலை ,என்னான்னு போன் போட்ட "பழுதடைந்துள்ளது ...உபயோகத்தில் இல்லை ..நம்பர் பிஸி ...இதாங்க வருது சிலிண்டரை மட்டும் காணோம் ,சரின்னு நேர்ல போனா ஒரு அம்மா உட்கார்ந்துகிட்டு "என்னங்க பண்றது சப்ளை வந்ததும் போடறோம் ,இன்னைக்கு வந்தா இன்னைக்கே போட்ருவோம் ,இல்லனா இன்னும் ரெண்டு நாள் லேட் ஆகும்னு ஈசியா சொல்றாங்க(அவுங்களுக்கு சிலிண்டர் தட்டுப்பாடே வராது போல!!! ) ஏஜென்சி மூலமா ஒரு சிலிண்டர் விலை (முன்னூத்து நாப்பத்தி அஞ்சு ரூபாய் )
கடைசில ப்ளாக்ல அறுநூறு ரூபாய் கொடுத்து வாங்கினோம் .
என்ன பண்ண தீபா.........வ ...ளி(லி )யாச்சே ?!
கெரசின் பத்தி பேச்சே வேணாம் (பிச்சிபுடுவேன் பிச்சி ...)
லிட்டர் -முப்பத்து அஞ்சுல இருந்து அம்பது அருவதுனு இஷ்டத்துக்கு விக்கிராங்கப்பா ..என்னத்த சொல்ல ?
ஐப்பசி அடைமழைக்கு மட்டும் இல்லை போல அஸ்வினி தேவர்களுக்கும் ...காஸ் சிலிண்டர் தட்டுப்பாடுக்கும் கூட ஸ்பெஷல் தான் போல ?!!! ஐப்பசி அடைமழை சரி ...கார்த்திகை கனமழையாமே !!!
திருவாளர்.பொதுஜனங்களே உங்கள் சமத்து எதுக்கும் பாத்து யூஸ் பண்ணுங்க காஸ் சிலிண்டரையும் ...கெரசினையும்

Wednesday, October 22, 2008

ஸ்ட்ராபெர்ரி தெரியும் அதென்ன கிரேன்பெர்ரி ?

இதுவும் ஸ்ட்ராபெர்ரி போல ஒரு பழ வகை தான் , இங்கே இந்தியாவில் இது நிறையக் கிடைக்குமா என்ன என்பதெல்லாம் தெரியவில்லை ,ஆனால் "பெரும்பாலும் பெண்களுக்கு வரும் "சிஸ்டைடிஸ்" எனும் உபாதைக்கு இது ஒரு மிகச் சிறந்த நிவாரணி என்று மருத்துவ அறிக்கை கூறுகிறது .இதை ஜூஸ் செய்தும் குடிக்கலாம் ...மாத்திரை பட்டைகளாகவும் கிடைக்கும் .சிஸ்டைடிஸ் பெண்களை மட்டும் பாதிப்பதில்லை ...ஆண்களும் பாதிக்கப் படலாம் , எல்லா வயதினரையும் ithu தாக்கலாம் .பெரும்பாலும் பெண்கள் இருபது முதல் ஐம்பத்து வயது வரை இதனால் பாதிக்கப் படுகின்றனர் .ஒவ்வொரு முறை சிறுநீர் கழிக்கும்போதும் அளவற்ற எரிச்சல் ஏற்பட்டாலோ அல்லது அடிவயிற்றில் வலி இருந்தாலோ ...கலங்கலான நிறத்தில் சிறுநீர் வெளிப்பட்டாலோ ...சிறுநீருடன் ரத்தம் கலந்து வந்தாலோ , அல்லது இந்த அறிகுறிகளுடன் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் அவஸ்தை ஏற்பட்டாலோ ஒருவர் ஆணோ அல்லது பெண்ணோ சிஸ்டைடிஸ் உபாதையால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் எனத் தெரிந்து கொள்ளலாம் .இந்நோய் பெரும்பாலும் இ . கோலி எனும் பாக்டீரியாவால் தான் பரப்பப்படுகிரதாம் . இது சிறுகுடல் பகுதியில் காணப்படும் . பெரும்பாலும் சுத்தமின்மை காரணமாகவும் , உடலில் ஏற்ப்படும் நீர் இழப்பின் காரணமாகவுமே இந்த பாக்டீரியா உடலில் கிட்னி கும் கூடப் பரவ வாய்ப்பு ஏற்படலாம் . சரி...சரி .இப்படியே நீட்டிக் கொண்டு இன்னும் பத்துப் பக்கங்கள் கூட எழுதலாம் தான் ... கிரான்பெர்ரி என்ற பெயர் புதிதாக இருக்கிறதே என்று நெட்டில் தேடினால் இப்படி ஒரு பயனுள்ள விஷயம் சிக்கியது .இந்தப் பழங்களில் சிட்ரிக் அமிலம் அபிரிமிதமாக இருப்பதால் இது இந்த உபாதையைத் தீர்ப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது அவ்வளவு தான் மேட்டர் !!!கிரேன் பெர்ரி கிடைத்தால் சரி தான் .

" விளையும் பயிர் முளையிலே "

டைணிங் ஹாலில் உட்கார்ந்திருந்த குழந்தை அஷ்விதாவைக் கண்டதும் ஜன்னல் மேல் தாவி ஏறிக்கொண்டது , ஏய் மேல ஏறாத விழுந்து வைக்கப் போற பதட்டமாய் அவள் கத்தினாள் .

சரி ..சரி இரு நீ கிட்ட வராத நானே இறங்கிடறேன் ...குழந்தை அவளே இறங்கி வந்து படுக்கை அறைக்குள் நுழைந்து விட்டாள்,


பாப்பா பப்பு மும்மு டா சூப்பர் டேஸ்ட்...ஒரு வாய் சாப்டுப் பார் அப்புறம் நீயா வேணும் ...வேணும்ப, வா வந்து வாங்கிக்கோ என் செல்லக்குட்டி இல்ல !

அஷ்விதா படுக்கை அறைக்கு வந்ததும் குழந்தை அவள் எட்டிப் பிடிக்க முடியாதபடி வழுக்கிக் கொண்டு பின்வாசலுக்கு ஓடினாள்.ஹை..உங்கைல தான் மம்மு பிளேட் இருக்கே ..என்ன எப்படி நீ பிடிப்ப ? தள்ளி நின்று கொண்டு எக்காளமாய் சிரித்தது.

சரி..சரி விளையாண்டது போதும் வா ..வந்து "ஆ " வாங்கிக்கோ அப்போ தான் ஈவினிங் பார்க் கூட்டிட்டுப் போவேனாம் ; உள்ளே வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு சிரித்துக் கொண்டு சமாளிப்பாய் கெஞ்சினாள்,

பார்க் எல்லாம் வேண்டாம் "அபிராமிக்குப் போலாம் இன்னைக்கு " அப்போ தான் நான் "ஆ " வாங்கிக்குவேன் ,அபிராமிக்கா ..!!! OK ..OK பாப்பு என்ன சொல்றாளோ அங்கேயே போலாம் ,

நீ பஸ்ட் சாப்பிட்டு முடி அப்புறம் டைம் ஆயிடும்ல மூடிடுவாங்க இல்ல ?இரு மம்மி வரேன் ..குழந்தை இப்போது பாத்ரூம் பக்கம் போய் விட்டாள் .பாப்பு பாத்ரூம்குள்ள சும்மா ..சும்மா போக கூடாது நு எவ்ளோ வாட்டி சொல்லிருக்கேன் ,

பேட் ஹாபிட் கால் வாஷ் பண்ணிட்டு வெளிய வா ,கையில் சாதம் ஏந்தியவாறு அஷ்விதா குரலில் லேசாக கடுமை ஏற்றிக் கூறினாள்.அதிகம் கத்தக் கூடாதே ..உள்ளதும் போன கதையாகி விடுமே ,

எப்படியாவது பாப்புவை சாப்பிட வைக்கவேண்டும் , காரியம் ஆக வேண்டுமே .

ஆம் !!!

அஷ்விதா குழந்தைக்கு சாதம் பிசைந்து ஊட்டிக்கொண்டிருந்தாள் , சும்மா பத்து நிமிஷ வேலை என்று நினைத்து விடாதீர்கள் ...ஒரு மணி நேரமாக ஊ ...ட்..டிக் கொண் ..டே ..இருக்கிறாள் ,

அவளும் என்னென்னவோ சொல்லி குழந்தையை ஏமாற்றி சேர்ந்தாற்போல ஒரு ரெண்டு பிடி சாதத்தையாவது வாய்க்குள் தள்ளி விடலாமென்று தான் பிரம்மப் பிரயத்தனம் செய்து பார்க்கிறாள் .


பாத்ரூமில் இருந்து வெளியே வந்த குழந்தை இவளது நல்ல நேரமோ என்னவோ அவள் மடியில் வந்து பாசமாய் உட்கார்ந்து கொண்டது ,உச்சி குளிர்ந்து போனவளாய்,


என் தங்கமாச்சே ...என் அம்முக்குட்டியில்ல என் செல்ல புஜ்ஜியில்ல..தங்கக் கட்டியில்ல "ஆ " காட்டும்மா ...ஒரே ஒரு வாய் தான் அப்புறம் மம்மி (சாரி பாஸ் எகிப்த் மம்மி இல்ல இது தமிழ் மம்மி ) உன்ன சாப்பிடச் சொல்லி தொந்திரவே பண்ண மாட்டேனாம் ;


அதுவரை மடியில் உட்கார்ந்திருந்த குழந்தை மெல்ல நழுவி சோபாவுக்குச் சென்றது ; இரு மம்மி சாப்பிடறேன் ...வெயிட் ...வெயிட் கையால் சைகை காட்டிவிட்டு ,


ரைஸ் எதுக்கு சாப்பிடனும் ? நூடுல்ஸ் தா அதான் வேணும் ,அஷ்விதா முறைத்தாள்;முன்னாடியே சொல்றதுக்கென்ன ஒரு மணி நேரமா உன் பின்னாடி தான அலையறேன் ?


கோச்சுக்காத மம்மி நூடுல்ஸ் தா சாப்பிடறேன் ...என் செல்ல மம்மி இல்ல !!!உள்ளெழுந்த அத்தனைக் கோபத்தையும் காட்டினால் காரியம் சுத்தமாய்க் கேட்டு விடுமே ,ஐந்தே நிமிடத்தில் நூடுல்ஸ் தயாரித்துக் கொண்டு குழந்தையை தேடினால் காணோம் .


பாப்பு வேர் ஆர் யு ? டெல் மீ ...


அஷ்விதா வீடு முழுதும் தேடி கடைசியில் பூஜை ரூம் கதவு மூலையில் பாப்புவைக் கண்டுபிடித்து இழுத்து வந்து மறுபடி டைணிங் ஹால் மேஜையில் அமர வைப்பதற்குள் போதும் ..போதும் என்று வந்தது அவளுக்கு ,


நூடுல்ஸ் ரெடி போர்க் வச்சு நீயா சாப்பிடுவயாம் ,மம்மி சும்மா உட்கார்ந்து பாப்பு சாப்பிடறத பார்த்துட்டே இருந்து பினிஷ் பண்ணதும் வெரி குட் சொல்வேனாம் ..ஒ.கே வா ?


என்ன நினைத்தாலோ என்னவோ ஒரே ஒரு வாய் நூடுல்ஸ் எடுத்து போர்க்கால் வாயிலிட்ட பாப்பு "ஓ என்று தனக்குத் தானே உமட்டிக் கொண்டு மறுபடி போர்க்கை கீழே போட்டு விட்டாள் .


மம்மி வாமிட் வருது மம்மி நூடுல்ஸ் இப்போ வேணாம்..அப்புறமா சாப்டுக்கறேன் .என்றாள் . ஏய் என்னடி இது சாதம் தான் வேண்டாம்ன சரி நூடுல்ஸ் கேட்டஎனு செஞ்சு எடுத்துட்டு வந்த இதுவும் வேணாம்கற ...எத தான் சாப்டப் போற நீ ?


இப்ப ஏதாவது ஒன்னு சாப்பிடப் போறிய.. இல்ல பூதத்தைக் கூப்பிடவா ?கேட்ட மாத்திரத்தில் பாப்பு அஷ்விதாவின் சேலை நுனியை இறுகப் பற்றிக் கொண்டு தனது அச்சத்தை காட்ட ;குழந்தை கொஞ்சம் பயந்தமாதிரி இருக்கிறதே ..அது தான் சாக்கென்று ;


நிஜமாதான் சொல்றேன் இப்போ நீ மட்டும் சாப்பிடலை , கலர் ..கலர் பூதம் (ஹி...ஹி ஏதாவது ஒரு பேர் வேண்டுமே பூதத்துக்கு ) வந்து உன்னைத் தூக்கி பைல போட்டிக்கிட்டு ஓடியே போய்டும் ,


பாப்பு கொஞ்ச நேரம் அமைதி காத்தாள். ஒரே ஒரு நிமிஷம் தான் . அப்புறம் கேட்டாள்.


எங்கம்மா போகும் பைல போட்டுத் தூக்கிட்டு ?


ஹ்ம்ம் ...அபிராமிக்கு ..எங்க போகும் எங்கயாச்சும் காட்டுல கொண்டு போய் போட்டுட்டுப் போய்டும் .


ஆமாம் ...பேசாம சாப்டுறு , அஷ்விதா மேலும் கொஞ்சம் பயம் ஏற்றிப் பார்த்தாள்...எல்லாம் அவளை சாப்பிட வைக்கத் தான் ;


பாப்புவா கொக்கா ?!!!


ம்ம்ம் ...மம்மி கலர் கலர் பூதம் தான சொன்ன ?


ஆமாம் பார்க்க ரொம்ப பயங்கரமா இருக்கும் ...வந்திரப் போகுது சீக்கிரம் சாப்டுறு பாப்பு ;


அதில்லம்மா அந்த பூதம் வரும்போது எந்த கலர் ல வரும் ?


நீ இப்படியே கேட்டுக்கிட்டே இரு பூதம் வந்து சாப்பிடாத பிள்ளை எங்க.. எங்க நு தேடி உன்னைப் பிடிச்சி பைல போட்டுக் காட்டித் தூக்கிட்டுப் போயடட்டும் ;


இன்னும் இறுக்கமாக அஷ்விதாவின் சேலையைப் பற்றிக் கொண்டு ஒடுங்கி மடியில் அமர்ந்து கொண்டு சேலை தலைப்பால் தன்னை மூடிக் கொண்ட பாப்பு ;


மம்மி பிங்க் கலர் ... ப்ளூ கலர் கூட அந்த பூதம் வருமா மம்மி ? என்றாள்


வரும்..வரும் ;இப்ப வரத்தான் போகுது நீ சாபிடாமலே இருக்க இல்ல இதோ வந்திரும் பாரு .


கேட்டுக்கொண்டிருந்த பாப்புவின் கண்களில் இப்போது பயம் போய் மெல்லக் கண்கள் பளிச்சிட ,


மம்மி ..மம்மி ப்ளீஸ் மம்மி அந்த பூதத்தை பிங்க் கலர்ல வரச் சொல்லு மம்மி;வேற கலர் வேணாம் .


பிங்க் இல்லன ப்ளூ ஓ.கே ,வரச் சொல்லு மம்மி .


என்னது ?


ங்ஹே வென்று ஒன்றும் புரியாமல் கொஞ்ச நேரம் வெறித்து விட்டு பாப்புவுக்குப் பிசைந்த சாதத்தை அஷ்விதாவே சாப்பிட்டு முடித்தாள் .


வேறு வழியில்லையே !!! .


"குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று


குற்றம் குறை காணாத இனத்தால் ஒன்று ".


கே.டிவி யில் பாட்டு ஓடிக் கொண்டிருந்தது .

Tuesday, October 21, 2008

பகிர்வு - ஈழம்

புதுசு கண்ணா புதுசுன்னு நிறையப் பேர் ப்ளாக்ல எழுதித் தள்ராங்கப்பா; நல்லாத்தான் இருக்கு ,உட்கார்ந்து யோசிப்பாங்க போல ...கொஞ்ச நேரம் முன்னாடி ஈழம் தமிழ் எம்.பி பிரேம் ராமச்சந்திரனோட இன்டெர்வியூ படிச்சேன் . என்ன பாவம் செஞ்சாங்கப்பா ஈழத்து தமிழ் மக்கள் , ஐரோப்பிய தொண்டு நிறுவனங்களை சிங்கள அரசு விரட்டின பிறகு செஞ்சிலுவைச் சங்கமும் இறந்தவர்களை அப்புறப் படுத்தும் பணிகளை மட்டும் தான் இப்போதைக்கு செய்துட்டு வருதாம் , அந்த மக்களோட ரணங்களுக்கு மருந்து போடப் போறது தான் யாரு ? நம்ம அரசியல்வாதிகள் திடீர் ஸ்டண்ட் அடிக்கறதோட சரி , ஈழத் தமிழர்கள் பத்தி பத்திரிகைகள்ல வர்ற ஒவ்வொரு படமுமே பகீர் ராகம் தான் ...கொஞ்ச நாள் முன்னாடி நோபெல் பரிசு பெற்ற ஒரு ஐரோப்பிய புகைப்படக்காரரோட புகழ் பெற்ற புகைப்படம் ஒன்றை பார்த்தேன் .

அது சூடானின் இரக்கமற்ற வறுமையை ...பஞ்சத்தை அப்பட்டமா காட்டுகிற நிஜம் . இந்தப் புகைப்படம் எடுத்து பரிசு பெற்றதுக்கு அப்புறம் அவருக்கு வாழ்க்கை மேல ஒரு பிடிப்பே இல்லாம பொய் தற்கொலை பண்ணிகிட்டாராம் .


பசியால் வாடிப் பொய் குற்றுயிராகி விட்ட ஒரு சிறுவன் வெறும் நிலத்தில் நடக்கக் கூட முடியாம மண்டியிட்டு கவிழ்ந்து கிடக்க ,அவன் எப்போதடா சாவான் அவனை இரையாக்கிக் கொள்ளலாம் என ஒரு வல்லூறு அவனுக்குப் பின்னால் காத்திருக்கிறது . இது தான் அந்தப் புகைப்படம் , இதைக் கண்டவுடன் யாருக்குமே பதட்டம் வரத்தான் செய்யும் .


இதே உணர்வை இப்போது வெளிவரும் ஈழத்துப் புகைபடங்களும் எழுப்புகின்றன,


"என்று தணியுமிந்த போர் வெறி


என்று நிமிர்வர் எம் ஈழத் தமிழர்கள் ?!"


விடை தெரியாக் கேள்வி என்று தெரிந்தே தான் என்னைப் போல பலரும் கேட்டுக் கொள்கிறோம் எங்களுக்குள்ளே .


எல்லாப் பயணங்களும்...






எல்லா பயணங்களும்


கீழிருந்தே துவங்குகின்றன ...


மேலே செல்லச் செல்ல


தொடரும் வால் போல


நீளும் ஏணிப்படிகள்


படிப்படியாய் தயங்கி


அவ்விடத்தே நிலைத்துவிட


பயணங்கள்


என்றென்றும் துவங்கித் தொடர்கின்றன ...


பயணிகள்


மாறலாம்


பயணங்கள் மாறுவதில்லை


எல்லாப் பயணங்களும்


கீழிருந்தே துவங்கித் தொடர்கின்றனவாம் ...!!!
கயல்

Monday, October 20, 2008

சைக்கிள்






ஐம்பது காசு இருந்தால் போதும் அரை மணி நேரம் சைக்கிள் ஓட்டலாம் . அம்மா தர வேண்டுமே ! நேற்று தான் அப்பாவிடம் வாங்கினோம் ,அதற்கும் முந்தைய நாள் அத்தையிடம் ... இன்று யாரிடம் கேட்கலாம் ?!;


விஜயலுவின் மனம் பர பரவென்று யோசித்தவாறு சைக்கிள் கடை முன்பாகவே சுற்றிக் கொண்டிருந்தது .தினம் ஒரு ஐம்பது காசு கொடுத்தால் இவர்களென்ன குறைந்த போய்விடுவார்கள் ,நினைக்கும் போதே தன் நெஞ்சம் தன்னை சுட்டது ,காலை முதல் எத்தனை ஐம்பது காசுகள் வாங்கிச் செலவழித்தாகிவிட்டது ,இப்போது போய் கேட்டால் யார் தரப் போகிறார்கள் ?யோசிக்கும் போதே மஞ்சள் நிற பெயிண்ட் அடித்த அரை சைக்கிள் ஐ மோகனப் பிரியா எடுத்துக் கொண்டிருந்தாள் .


போன வாரம் வரை கேட்டால் ஒரு ரவுண்டு ஓட்ட தருவாள் தான் .இன்றைக்கு சைக்கிள் கடை முன்னால் விஜயலுவைப் பார்த்ததுமே கழுத்தை ஒரு வெட்டு வெட்டிக் காட்டி விட்டல்லவா குரோதத்துடன் போகிறாள் .


முந்தா நாள் சமூகவியல் வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கும் போது ராமு வாத்தியார் எப்போதும் போல் கேள்வி கேட்டார் , பதில் தெரிந்தவர்கள் சொல்லி விட்டு தெரியாதவர்களின் முதுகில் குனிய வைத்து குத்துவது அந்த வகுப்பின் மரபு .அப்படித்தான் அன்று விஜயலு பதில் சொன்னதும் மோகனப் ப்ரியாவை குனிய வைத்து கொஞ்சம் பலமாக குத்தி விட்டாள்...அதிலிருந்து அவள் இவளுக்கு சைக்கிள் மட்டுமல்ல வேறு எதுவும் தர மாட்டேனென்று விட்டாள் ...


கொய்யாப் பழம் ...


பலாக்கொட்டை ...


மாம்பழக் கீத்து ...


நாவல் பழம் ...


இலந்தைப் பழம் ....


எதுவுமே தான் !


இவளிடம் போய் சைக்கிள் கேட்டு அவமானப் படுவதா ?


நிச்ச்சயம் அவள் சும்மா தொட்டுப் பார்க்கக் கூட விட மாட்டாள் ...கூட இருக்கும் அவள் கூட்டாளிகள் இருக்கிறார்களே பிசாசுகள் ...சரியான பேய்க்குட்டிகள்..!


சைக்கிள் வேண்டுமே ஓட்ட !இப்போது என்ன தான் செய்வது ?சைக்கிள் பைத்தியம் பிடித்து ஆட்டுதுடீ உன்ன ;அக்கா அடிக்கடி வீட்டில் மாட்டி விட ஆரம்பித்து விட்டாள் .


அம்மா அவளுக்கு காசா தராத சைக்கிள் கடைல தான் எந்நேரமும் கிடக்கா ...பேசாம சேவு ...சீனி முட்டாய் ...மரவள்ளிக் கிழங்கு எதாச்சும் வாங்கி குடு ...இல்லாட்டி சைக்கிள் ல அழுதுட்டு என்கிட்டே பங்கு கேட்பா ;அக்காவை அறையனும் போல இருக்கும் அந்நேரம் ;


அந்த ரோஸ் நிற நடுக்கம்பியிட்ட சைக்கிள் இருகிறதே அது தான் விஜயலுவின் செல்ல வண்டி .சைக்கிள் கடை பரமு அண்ணாச்சியிடம் எத்தனையோ தடவை அதை யாருக்கும் தராதிங்க அண்ணே என்று சொல்லி இருக்கிறாள் .அந்த நேரம் சரி சரி என்று போக்கு காட்டி விட்டு அடுத்த நொடியே யார் வந்து கேட்டாலும் காசுக்கு பேதமின்றி எல்லா சைக்கிள் லும் வாடகைக்குத் தருவார் சைக்கிள் கடை பரமு.


அந்த ரோஸ் நிற சைக்கிள் இன்று இன்னமும் யாரிடமும் போகவில்லை ...அதை எடுத்தே ஆகவேண்டும் என்று தான் பரபரப்பாய் யோசித்துக் கொண்டு இருந்தாள் விஜயலு ,சைக்கிள் லில் அப்படி என்ன தான் கண்டாலோ ?"ஆன்ட பிடகு ஏமிசே சைக்கிள் லு "அக்கா கத்துவாள் .


பஸ் ஸ்டாண்டில் தான் சைக்கிள் கடை ,


யாராவது சொந்தக்காரர்கள் வந்து அடுத்த பஸ்ஸில் இறங்க மாட்டார்களா காசு கிடைக்குமே சைக்கிள் விட !


சித்திக்கு என்ன கேடு பக்கத்து ஊர் தானே ? வந்தால் என்ன?


அத்தை மதுரையில் இருக்கிறாள் ...ஆனாலும் அவசரத்திற்கு வரலாம் ...வந்தால் என்ன கெட்டு விடும் ?


மாமா கோயம்பத்தூரில் இருந்தால் என்னவாம் இப்போது வந்து தொலைப்பதற்கு என்ன?


எங்கோ ஒழிந்து போய்விட்டார்கள் இந்த சொந்தக்காரர்கள் எல்லோரும் ஒரேநாளில் !!!


விஜயலுவுக்கு மெல்ல அழுகை வரப் பார்த்தது .சொந்தக்காரர்களை நினைத்ததெல்லாம் இல்லை .


அந்த ரோஸ் நிற கம்பி சைக்கிள் இருக்கிறதே அதை ஒரு பையன் ஸ்டாண்டை விட்டு வெளியே தள்ளிக் கொண்டு இருந்தான் .அது விஜயலுவின் செல்ல வண்டி ஆயிற்றே !!!யார் அந்தப் பையன் ?


ஊர் மந்தைப் வேப்ப மரப் பிள்ளையார் மீது எக்கச்சக்க கோபம் வந்தது ,ஆலமரம் இல்லாமல் வேப்ப மரத்தடியில் உட்கார்ந்திருக்கும் போதே உனக்கு இவ்வளவு குசும்பு இருந்தால் ... உனக்கு இனி தோப்புக்கரணமே போடபோவதில்லை .மனதிற்குள் கருவிக் கொண்டாள்.


போயும் போயும் அந்த கோனை வாய் கொண்டால் சாமிக்கா ரோஸ் சைக்கிள் போய் சேரனும் ?எல்லாம் உன்னால் தான் பிள்ளையார் !என் ரோஸ் சைக்கிள் போச்சே !!!அவன் போகிற போக்கில் இவளைப் பார்த்து நக்கலாய் சிரித்தமாதிரி இவளை நினைத்துக் கொண்டாள் .


சேச்சே ...இனி இந்த பரமு சைக்கிள் கடைக்கே வரவே கூடாது .ஊரில் வேறு சைக்கிள் கடையா இல்லை ?ஆமாம் வேறு இல்லையே ...ஒரே ஒரு கடை தானே ஊரில் !!!


தேவையே இல்லாமல் இதுவும் ஞாபகத்துக்கு வர இல்லாவிட்டால் போய்த்தொலையட்டும் .இனி பரமு கடை எந்த திசை என்று கூட மறந்து போகணும் பிள்ளையாரப்பா ...கண்களை இருக்க மூடி சிலுவைக்குறி இட்டுக் கொண்டு வேண்டி விட்டு வீட்டை பார்த்து ஓடினாள்,


படிப்பது பாதிரிமார் பள்ளிக்கூடம் ஆச்சே!!!சிலுவை இடாவிட்டால் பிள்ளையார் கோபித்துக் கொள்ளக்கூடுமே !!!


விஜயலு மெல்ல வீட்டுக்குள் எட்டிப் பார்த்தாள் அம்மா புறக்கடையில் பாத்திரம் தேய்க்கும் சத்தம் கேட்டது .அக்கா ஏழாம் வகுப்பு கூட்டு வட்டி கணக்குப் போட்டுக் கொண்டிருந்தாள் இவளுக்கு முதுகைக் காட்டியவாறு ;


இது தான் நல்ல சமயம் யாரும் கவனிக்கவில்லை இருட்டிக் கொண்டு வேறு வந்தது ..மழைக்காலம் ஆச்சே !!!சாயந்திரம் பெட்டிகடையில் வாங்கித் தின்ற கடலை உருண்டையும் அஞ்சு காசு அப்பளமும் என்னத்திற்கு ஆகும் ?


பசி எடுக்கத் தான் செய்தது ;"எங்க போய் ஊர் சுத்திட்டு வர ?" அம்மா முதுகில் சத்து சாத்தென்று சாத்துவாளே?!பூனை போல கூடம் தாண்டி எல்லோரும் படுக்கும் இடத்தில் விரிப்பு எதுவும் இன்றியே அந்த ரோஸ் நிற சைக்கிள் ஐ நினைத்துக் கொண்டே மெல்ல ...மெல்லத் தூங்கிப் போனால் விஜயலு .

இருளின் வெளிச்சத்தில் ...

வெளிச்சத்திற்காகக்

காத்திருந்து ...


காத்திருந்து


இருள் பழகிப் போயிற்று


இருள் சுகமானது தான் !


சுதந்திரமானதும் கூடத் தான் ...


இருளின் இதமான நட்பில்


வெளிச்சம் பகையாகி போய்விடின்


என் செய்வதென்று தான்


இன்னும்


காத்திருக்கிறேன்


வெளிச்சத்திற்காக ...?!

Followers