வெறும் வார்த்தைகளில்
வாழ்ந்து
முடிந்து போன
காலங்கள்
ஐம்பதின் பின்
சூன்யம் உமிழ்கின்றன ...
அம்மா ...
அப்பா ...
அக்கா ...
தங்கை ...
அண்ணன் ...
தம்பி...
நெருக்கங்கள் எல்லாம்
கல்யாணமான
சிலவருடங்களில்
மெல்ல
மறைய
கூட்டு உருவங்களாம்
உறவுப் படைகள்
மனைவிக்கும்
மகனுக்கும்
மகளுக்கும்
காலநீட்டிப்பு ...
மருமகன்களும்
மருமகள்களும்
மற்றுமொரு
பாசக் கயிறாய் இறுக்கிக் கொண்டதும்
வெறும் வார்த்தைகளில்
மட்டுமேனும்
வாழ்ந்தே ஆகவேண்டிய
நிர்ப்பந்தம் ...!
யாருக்கு
யார் சொந்தமோ ?
"சொந்தமெனப் படுவது யாதெனில்
யாதொன்றும் நெருக்கமிலாதொரு பந்தமோ ?!"
0 comments:
Post a Comment