நிறப்பிரிகை

கதைகளுக்கும் ,கவிதைகளுக்கும் கூட நிறம் உண்டு என்பது என் நம்பிக்கை ;ஒவ்வொருகதையும் ,கவிதையுமே கூட ஏதோ ஒரு நிறத்தைப் பிரதிபலிக்கிறது என்பது நிஜம் ,எட்டாங்கிளாசில் ஹிஸ்டரி வாத்தியார் மேப் குறிக்கும் போது கடலுக்கு நீல நிறம் , நிலம் அல்லது தரைக்கு பிரவுன் நிறம் காடுகளுக்குப் பச்சை நிறம் என்று சொல்லித் தந்ததைப் போல கவிதைக்கும் நிறம் கண்டு பிடித்துக் குறிப்பிட்டால் சுவாரஷ்யமாக இருக்குமே என்று தோன்றியது ...இதோ சின்னதாக ஒரு முதல் முயற்சி ...

Sunday, October 5, 2008

நீடித்து நிற்பது எது?

நீடித்து நிற்பது எது?

தேடும் தொலைவுகளில்

எதுவும் கிடைப்பதில்லை

கிடைக்கும் தூரத்தில்

எதுவும் உவப்பதில்லை

உவக்கும் விஷயங்களும்

நெடுநாள் நீடிப்பதில்லை ...

நீடித்து நிற்பது எது?

நீயும் நானும் மட்டுமே

வானம்

பூமியிடம்

ஒருவேளை இப்படிச் சொல்லிடுமோ ?

இப்படியே ,

இப்படியே ...

கண்டதை யோசித்துக் குழம்பி

ஒருவழியாய்

கண் சொருகி தூங்கிப் போனேன் ...!!!

நாளை காலை

முழு ஆண்டுத் தேர்வு ?!


கயல்

0 comments:

Followers