நிறப்பிரிகை

கதைகளுக்கும் ,கவிதைகளுக்கும் கூட நிறம் உண்டு என்பது என் நம்பிக்கை ;ஒவ்வொருகதையும் ,கவிதையுமே கூட ஏதோ ஒரு நிறத்தைப் பிரதிபலிக்கிறது என்பது நிஜம் ,எட்டாங்கிளாசில் ஹிஸ்டரி வாத்தியார் மேப் குறிக்கும் போது கடலுக்கு நீல நிறம் , நிலம் அல்லது தரைக்கு பிரவுன் நிறம் காடுகளுக்குப் பச்சை நிறம் என்று சொல்லித் தந்ததைப் போல கவிதைக்கும் நிறம் கண்டு பிடித்துக் குறிப்பிட்டால் சுவாரஷ்யமாக இருக்குமே என்று தோன்றியது ...இதோ சின்னதாக ஒரு முதல் முயற்சி ...

Wednesday, October 22, 2008

" விளையும் பயிர் முளையிலே "

டைணிங் ஹாலில் உட்கார்ந்திருந்த குழந்தை அஷ்விதாவைக் கண்டதும் ஜன்னல் மேல் தாவி ஏறிக்கொண்டது , ஏய் மேல ஏறாத விழுந்து வைக்கப் போற பதட்டமாய் அவள் கத்தினாள் .

சரி ..சரி இரு நீ கிட்ட வராத நானே இறங்கிடறேன் ...குழந்தை அவளே இறங்கி வந்து படுக்கை அறைக்குள் நுழைந்து விட்டாள்,


பாப்பா பப்பு மும்மு டா சூப்பர் டேஸ்ட்...ஒரு வாய் சாப்டுப் பார் அப்புறம் நீயா வேணும் ...வேணும்ப, வா வந்து வாங்கிக்கோ என் செல்லக்குட்டி இல்ல !

அஷ்விதா படுக்கை அறைக்கு வந்ததும் குழந்தை அவள் எட்டிப் பிடிக்க முடியாதபடி வழுக்கிக் கொண்டு பின்வாசலுக்கு ஓடினாள்.ஹை..உங்கைல தான் மம்மு பிளேட் இருக்கே ..என்ன எப்படி நீ பிடிப்ப ? தள்ளி நின்று கொண்டு எக்காளமாய் சிரித்தது.

சரி..சரி விளையாண்டது போதும் வா ..வந்து "ஆ " வாங்கிக்கோ அப்போ தான் ஈவினிங் பார்க் கூட்டிட்டுப் போவேனாம் ; உள்ளே வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு சிரித்துக் கொண்டு சமாளிப்பாய் கெஞ்சினாள்,

பார்க் எல்லாம் வேண்டாம் "அபிராமிக்குப் போலாம் இன்னைக்கு " அப்போ தான் நான் "ஆ " வாங்கிக்குவேன் ,அபிராமிக்கா ..!!! OK ..OK பாப்பு என்ன சொல்றாளோ அங்கேயே போலாம் ,

நீ பஸ்ட் சாப்பிட்டு முடி அப்புறம் டைம் ஆயிடும்ல மூடிடுவாங்க இல்ல ?இரு மம்மி வரேன் ..குழந்தை இப்போது பாத்ரூம் பக்கம் போய் விட்டாள் .பாப்பு பாத்ரூம்குள்ள சும்மா ..சும்மா போக கூடாது நு எவ்ளோ வாட்டி சொல்லிருக்கேன் ,

பேட் ஹாபிட் கால் வாஷ் பண்ணிட்டு வெளிய வா ,கையில் சாதம் ஏந்தியவாறு அஷ்விதா குரலில் லேசாக கடுமை ஏற்றிக் கூறினாள்.அதிகம் கத்தக் கூடாதே ..உள்ளதும் போன கதையாகி விடுமே ,

எப்படியாவது பாப்புவை சாப்பிட வைக்கவேண்டும் , காரியம் ஆக வேண்டுமே .

ஆம் !!!

அஷ்விதா குழந்தைக்கு சாதம் பிசைந்து ஊட்டிக்கொண்டிருந்தாள் , சும்மா பத்து நிமிஷ வேலை என்று நினைத்து விடாதீர்கள் ...ஒரு மணி நேரமாக ஊ ...ட்..டிக் கொண் ..டே ..இருக்கிறாள் ,

அவளும் என்னென்னவோ சொல்லி குழந்தையை ஏமாற்றி சேர்ந்தாற்போல ஒரு ரெண்டு பிடி சாதத்தையாவது வாய்க்குள் தள்ளி விடலாமென்று தான் பிரம்மப் பிரயத்தனம் செய்து பார்க்கிறாள் .


பாத்ரூமில் இருந்து வெளியே வந்த குழந்தை இவளது நல்ல நேரமோ என்னவோ அவள் மடியில் வந்து பாசமாய் உட்கார்ந்து கொண்டது ,உச்சி குளிர்ந்து போனவளாய்,


என் தங்கமாச்சே ...என் அம்முக்குட்டியில்ல என் செல்ல புஜ்ஜியில்ல..தங்கக் கட்டியில்ல "ஆ " காட்டும்மா ...ஒரே ஒரு வாய் தான் அப்புறம் மம்மி (சாரி பாஸ் எகிப்த் மம்மி இல்ல இது தமிழ் மம்மி ) உன்ன சாப்பிடச் சொல்லி தொந்திரவே பண்ண மாட்டேனாம் ;


அதுவரை மடியில் உட்கார்ந்திருந்த குழந்தை மெல்ல நழுவி சோபாவுக்குச் சென்றது ; இரு மம்மி சாப்பிடறேன் ...வெயிட் ...வெயிட் கையால் சைகை காட்டிவிட்டு ,


ரைஸ் எதுக்கு சாப்பிடனும் ? நூடுல்ஸ் தா அதான் வேணும் ,அஷ்விதா முறைத்தாள்;முன்னாடியே சொல்றதுக்கென்ன ஒரு மணி நேரமா உன் பின்னாடி தான அலையறேன் ?


கோச்சுக்காத மம்மி நூடுல்ஸ் தா சாப்பிடறேன் ...என் செல்ல மம்மி இல்ல !!!உள்ளெழுந்த அத்தனைக் கோபத்தையும் காட்டினால் காரியம் சுத்தமாய்க் கேட்டு விடுமே ,ஐந்தே நிமிடத்தில் நூடுல்ஸ் தயாரித்துக் கொண்டு குழந்தையை தேடினால் காணோம் .


பாப்பு வேர் ஆர் யு ? டெல் மீ ...


அஷ்விதா வீடு முழுதும் தேடி கடைசியில் பூஜை ரூம் கதவு மூலையில் பாப்புவைக் கண்டுபிடித்து இழுத்து வந்து மறுபடி டைணிங் ஹால் மேஜையில் அமர வைப்பதற்குள் போதும் ..போதும் என்று வந்தது அவளுக்கு ,


நூடுல்ஸ் ரெடி போர்க் வச்சு நீயா சாப்பிடுவயாம் ,மம்மி சும்மா உட்கார்ந்து பாப்பு சாப்பிடறத பார்த்துட்டே இருந்து பினிஷ் பண்ணதும் வெரி குட் சொல்வேனாம் ..ஒ.கே வா ?


என்ன நினைத்தாலோ என்னவோ ஒரே ஒரு வாய் நூடுல்ஸ் எடுத்து போர்க்கால் வாயிலிட்ட பாப்பு "ஓ என்று தனக்குத் தானே உமட்டிக் கொண்டு மறுபடி போர்க்கை கீழே போட்டு விட்டாள் .


மம்மி வாமிட் வருது மம்மி நூடுல்ஸ் இப்போ வேணாம்..அப்புறமா சாப்டுக்கறேன் .என்றாள் . ஏய் என்னடி இது சாதம் தான் வேண்டாம்ன சரி நூடுல்ஸ் கேட்டஎனு செஞ்சு எடுத்துட்டு வந்த இதுவும் வேணாம்கற ...எத தான் சாப்டப் போற நீ ?


இப்ப ஏதாவது ஒன்னு சாப்பிடப் போறிய.. இல்ல பூதத்தைக் கூப்பிடவா ?கேட்ட மாத்திரத்தில் பாப்பு அஷ்விதாவின் சேலை நுனியை இறுகப் பற்றிக் கொண்டு தனது அச்சத்தை காட்ட ;குழந்தை கொஞ்சம் பயந்தமாதிரி இருக்கிறதே ..அது தான் சாக்கென்று ;


நிஜமாதான் சொல்றேன் இப்போ நீ மட்டும் சாப்பிடலை , கலர் ..கலர் பூதம் (ஹி...ஹி ஏதாவது ஒரு பேர் வேண்டுமே பூதத்துக்கு ) வந்து உன்னைத் தூக்கி பைல போட்டிக்கிட்டு ஓடியே போய்டும் ,


பாப்பு கொஞ்ச நேரம் அமைதி காத்தாள். ஒரே ஒரு நிமிஷம் தான் . அப்புறம் கேட்டாள்.


எங்கம்மா போகும் பைல போட்டுத் தூக்கிட்டு ?


ஹ்ம்ம் ...அபிராமிக்கு ..எங்க போகும் எங்கயாச்சும் காட்டுல கொண்டு போய் போட்டுட்டுப் போய்டும் .


ஆமாம் ...பேசாம சாப்டுறு , அஷ்விதா மேலும் கொஞ்சம் பயம் ஏற்றிப் பார்த்தாள்...எல்லாம் அவளை சாப்பிட வைக்கத் தான் ;


பாப்புவா கொக்கா ?!!!


ம்ம்ம் ...மம்மி கலர் கலர் பூதம் தான சொன்ன ?


ஆமாம் பார்க்க ரொம்ப பயங்கரமா இருக்கும் ...வந்திரப் போகுது சீக்கிரம் சாப்டுறு பாப்பு ;


அதில்லம்மா அந்த பூதம் வரும்போது எந்த கலர் ல வரும் ?


நீ இப்படியே கேட்டுக்கிட்டே இரு பூதம் வந்து சாப்பிடாத பிள்ளை எங்க.. எங்க நு தேடி உன்னைப் பிடிச்சி பைல போட்டுக் காட்டித் தூக்கிட்டுப் போயடட்டும் ;


இன்னும் இறுக்கமாக அஷ்விதாவின் சேலையைப் பற்றிக் கொண்டு ஒடுங்கி மடியில் அமர்ந்து கொண்டு சேலை தலைப்பால் தன்னை மூடிக் கொண்ட பாப்பு ;


மம்மி பிங்க் கலர் ... ப்ளூ கலர் கூட அந்த பூதம் வருமா மம்மி ? என்றாள்


வரும்..வரும் ;இப்ப வரத்தான் போகுது நீ சாபிடாமலே இருக்க இல்ல இதோ வந்திரும் பாரு .


கேட்டுக்கொண்டிருந்த பாப்புவின் கண்களில் இப்போது பயம் போய் மெல்லக் கண்கள் பளிச்சிட ,


மம்மி ..மம்மி ப்ளீஸ் மம்மி அந்த பூதத்தை பிங்க் கலர்ல வரச் சொல்லு மம்மி;வேற கலர் வேணாம் .


பிங்க் இல்லன ப்ளூ ஓ.கே ,வரச் சொல்லு மம்மி .


என்னது ?


ங்ஹே வென்று ஒன்றும் புரியாமல் கொஞ்ச நேரம் வெறித்து விட்டு பாப்புவுக்குப் பிசைந்த சாதத்தை அஷ்விதாவே சாப்பிட்டு முடித்தாள் .


வேறு வழியில்லையே !!! .


"குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று


குற்றம் குறை காணாத இனத்தால் ஒன்று ".


கே.டிவி யில் பாட்டு ஓடிக் கொண்டிருந்தது .

2 comments:

said...

"vepa mara uchiyil nindru pei ondru adum endru sollivaipanga, unthan veerathai mulaiyileye killi vaipanga, velaiyatra veenarkalin varthaikalai vedikaiyaga kooda nambi vidathey" endru pattukottai ezhuthiya padalai "pappu" erkanavey ketu irupalo ennovo?

said...

"vepa mara uchiyil nindru pei ondru adum endru sollivaipanga, unthan veerathai mulaiyileye killi vaipanga, velaiyatra veenarkalin varthaikalai vedikaiyaga kooda nambi vidathey" endru pattukottai ezhuthiya padalai "pappu" erkanavey ketu irupalo ennovo?

Followers