நிறப்பிரிகை

கதைகளுக்கும் ,கவிதைகளுக்கும் கூட நிறம் உண்டு என்பது என் நம்பிக்கை ;ஒவ்வொருகதையும் ,கவிதையுமே கூட ஏதோ ஒரு நிறத்தைப் பிரதிபலிக்கிறது என்பது நிஜம் ,எட்டாங்கிளாசில் ஹிஸ்டரி வாத்தியார் மேப் குறிக்கும் போது கடலுக்கு நீல நிறம் , நிலம் அல்லது தரைக்கு பிரவுன் நிறம் காடுகளுக்குப் பச்சை நிறம் என்று சொல்லித் தந்ததைப் போல கவிதைக்கும் நிறம் கண்டு பிடித்துக் குறிப்பிட்டால் சுவாரஷ்யமாக இருக்குமே என்று தோன்றியது ...இதோ சின்னதாக ஒரு முதல் முயற்சி ...

Saturday, October 18, 2008

சாயங்கால மழை


ரசிப்பதற்கு
ஆட்களின்றி
நகரத்தின்
சிதிலமான
தார்சாலைகளையும்
மண்சாலைகளையும்
வித்யாசமின்றி
மூர்க்கமாய்த்
தழுவிப் பரவிச் சென்றது ...
தாமரை இலைத் தண்ணீர்
தாரில் விழுந்த மழை
ஒட்டாமல் நழுவி ஓட
மண்ணில் விழுந்தமழை
பாதம் வைத்தவர்
ஒருவர் விடாமல்
அப்பிக் கொண்டு ஒட்டி நின்றது
சாதம் பிசைந்த சாம்பாராய்
மண் மகத்தானதே !!!
விரையும் பொழுதுகளில்
விவரமாய்க் காண விருப்பமின்றி
நனைத்து மறைந்தது
சாயங்கால மழை
மறுபடியும்
வரலாம்
எப்போது வேண்டுமானாலும் !?

0 comments:

Followers