ரசிப்பதற்கு
ஆட்களின்றி
நகரத்தின்
சிதிலமான
தார்சாலைகளையும்
மண்சாலைகளையும்
வித்யாசமின்றி
மூர்க்கமாய்த்
தழுவிப் பரவிச் சென்றது ...
தாமரை இலைத் தண்ணீர்
தாரில் விழுந்த மழை
ஒட்டாமல் நழுவி ஓட
மண்ணில் விழுந்தமழை
பாதம் வைத்தவர்
ஒருவர் விடாமல்
அப்பிக் கொண்டு ஒட்டி நின்றது
சாதம் பிசைந்த சாம்பாராய்
மண் மகத்தானதே !!!
விரையும் பொழுதுகளில்
விவரமாய்க் காண விருப்பமின்றி
நனைத்து மறைந்தது
சாயங்கால மழை
மறுபடியும்
வரலாம்
எப்போது வேண்டுமானாலும் !?
0 comments:
Post a Comment