நிறப்பிரிகை

கதைகளுக்கும் ,கவிதைகளுக்கும் கூட நிறம் உண்டு என்பது என் நம்பிக்கை ;ஒவ்வொருகதையும் ,கவிதையுமே கூட ஏதோ ஒரு நிறத்தைப் பிரதிபலிக்கிறது என்பது நிஜம் ,எட்டாங்கிளாசில் ஹிஸ்டரி வாத்தியார் மேப் குறிக்கும் போது கடலுக்கு நீல நிறம் , நிலம் அல்லது தரைக்கு பிரவுன் நிறம் காடுகளுக்குப் பச்சை நிறம் என்று சொல்லித் தந்ததைப் போல கவிதைக்கும் நிறம் கண்டு பிடித்துக் குறிப்பிட்டால் சுவாரஷ்யமாக இருக்குமே என்று தோன்றியது ...இதோ சின்னதாக ஒரு முதல் முயற்சி ...

Monday, October 6, 2008

அட்சயபாத்திரமும் அபார்ட்மென்டும்...!!!




அட்சய பாத்திரமும் அபார்ட்மென்டும்



வெண்டையும்
கத்தரியும்


பீர்க்கையும்

புடலையும்


கொத்துக் கொத்தாய்


காய்த்துக் குலுங்கும்


தாத்தாவின்


தோட்டமெனும் அட்சயபாத்திரம்


மத்தியான இடைவெளியில்


சோற்றுக் கும்பாக்களால்


களை கட்டும்


கிணற்றடி மோட்டார் ரூம்


தோட்டம் சுற்றி


வரப்போரம் அணை கட்டும்
ஆமணக்கும்
மஞ்சநத்தியும்
தப்பி முளைத்த
தண்டுக்கீரைச் செடிகள்
ஊசி நுழையும் இடைவெளியில்
ஊடுருவும் பிரண்டைக் கொடிகள்
மடி நிறைய அவரைக்காயும்
தூக்கு நிறைய தக்காளியும்
கண் காணக் கிடைப்பதில்லை
இன்றைய சாயங்காலப் பொழுதுகள் ,
இதுவும் ஒரு காலம் !
இப்படியும் பொழுதுகள் கழியலாம்
தாத்தாவும்
இன்றில்லை
அட்சய பாத்திரமும்


இங்கில்லை
இருப்பதெல்லாம்
கம்பீரமான
அபார்ட்மென்ட் மட்டுமே
லேசாய் மிக லேசாய்
மனம் வலித்தாலும்
நானும் அங்கே
குடியிருப்பதால்
பாழும் நினைவுகள்
மட்டும்
நீங்காமல் நெஞ்சோடு ...!!!
கயல்

0 comments:

Followers