நிறப்பிரிகை

கதைகளுக்கும் ,கவிதைகளுக்கும் கூட நிறம் உண்டு என்பது என் நம்பிக்கை ;ஒவ்வொருகதையும் ,கவிதையுமே கூட ஏதோ ஒரு நிறத்தைப் பிரதிபலிக்கிறது என்பது நிஜம் ,எட்டாங்கிளாசில் ஹிஸ்டரி வாத்தியார் மேப் குறிக்கும் போது கடலுக்கு நீல நிறம் , நிலம் அல்லது தரைக்கு பிரவுன் நிறம் காடுகளுக்குப் பச்சை நிறம் என்று சொல்லித் தந்ததைப் போல கவிதைக்கும் நிறம் கண்டு பிடித்துக் குறிப்பிட்டால் சுவாரஷ்யமாக இருக்குமே என்று தோன்றியது ...இதோ சின்னதாக ஒரு முதல் முயற்சி ...

Friday, October 24, 2008

ஐப்பசி ஸ்பெஷல் அடைமழையா...அஸ்வினிதேவர்களா... காஸ் சிலிண்டர் தட்டுப்பாடா!!!?









என்னத்த சொல்லங்க ஊரெல்லாம் அடைமழை ; சைக்கிள் கேப்புல அடைமழை பத்தி ஒரு மேட்டர் சொல்லிக்கறேன் ... அது இன்னானா "ஐப்பசி அடைமழை " பழமொழி இருக்கில்ல இந்த ஐப்பசி மாசம் வருஷத்துல ஏழாவது மாசமா வருதுங்க . ஏழாம் நம்பர் அஸ்வினி தேவர்களைக் குறிக்குதாம் ...அதாகப் பட்டது என்னவெனில் ?
சிறு குறிப்பு :
சூரிய புத்திரர்களாகக் கருதப் படும் இந்த அஸ்வினி குமாரர்கள் எப்போதும் ஒன்றாகவே இருக்கும் இரட்டையர்கள் .மஹாபாரதத்தில் பாண்டுவின் இரண்டாவது மனைவி மாதுரி இந்த அஸ்வினி தேவர்களை பிள்ளை வரம் வேண்டிப் பிறகு பிறந்தவர்களே நகுலனும் ,சகாதேவனும் ...இருவரில் சகாதேவன் சோதிடத்திலும் நகுலன் குதிரைகளைப் பழக்குவதிலும் வல்லவர்கள் . அஸ்வினி புத்திரர்கலானதினாலேயே இவர்களுக்கு இந்தக் கலைகள் கை வந்தன என்கிறது இதிகாசமும் புராணமும் .
இந்த அஸ்வினி தேவர்கள் தம் தந்தையார் சூரிய பகவானின் பனிரெண்டு குதிரைகள் பூட்டிய தேரை ஓட்டும் சாரதிகளாகவும் இருப்பார்களாம் , இவர்களது பெயரால் ஐப்பசி மாதம் சமஸ்கிருத மொழியில் குறிக்கப் பெறுகிறது . சமஸ்கிருதத்தில் அஸ்வினா என்றால் தமிழில் ஐப்பசி என்கிறோம் . யாகங்கள் நடைபெறுகையில் அஸ்வினி தேவர்கள் வணங்கப் படுவதாக ரிக் வேதம் கூறுகிறது . அதோடு எனக்குத் தெரிந்த இன்னொரு செய்தி என்னவென்றால் இந்த அஸ்வினி குமாரர்கள் எந்நேரமும் உலகைச் சுற்றிக் கொண்டே இருப்பார்களாம் (அப்பா சூரியனாருக்கு தேர் ஒட்டியது போக...மாதுரிக்கு குழந்தை வரம் கொடுத்து பிறகும் எஞ்சிய நேரங்களில் ) சுற்றிக் கொண்டே இருப்பார்களாம் ;
அப்படி அவர்கள் நம்மில் யாரோ ஒருவரின் அருகில் வருகையில் நாம் என்ன மனதில் நினைக்கிறோமோ அது அப்படியே பலிக்கட்டும் என்று ஆஷிர்வதித்து (அதாவது நாம் நல்லது நினைத்தாலும் சரி கெட்டதும் நினைத்தாலும் சரி எதுவானாலும் நன்றாகக் கவனியுங்கள் கெட்டதும் கூடப் பலிக்கட்டும் என்று பாரபட்ச்சமின்றி ஆஷிர்வாதம் அளித்து விட்டுப் போய் விடுவார்களாம் !!!
இதை சமஸ்கிருதம் மிக எளிதாக "ததாஸ்து " என்று சொல்கிறது அதாவது "அப்படியே ஆகட்டும் "என்று பொருள் கொள்ளலாம் .
(இது வரமா ..சாபமா ...மண்டை கொடைச்சலாள்ள இருக்கு )
நல்லதை மட்டுமே எந்நேரமும் நினைச்சுட்டு இருக்க முடியுமா பிரதர் ?!
சிலநேரம் பக்கத்து வீட்டு பரசுராமன் பைக் எப்படா காணாமப் போகும் நு இருக்கும் ...!!!(அதெல்லாம் பலிக்குதா என்ன ? .....கொஞ்சூண்டாச்சும் பலிச்சிருக்குமோ ?
சரி மேட்டருக்கு வருவோம் ,
ஒண்ணுமில்ல இந்த அடைமழைல மின்வெட்டு ரொம்பப் பெரிய பிரச்சினையே இல்லைங்கற மாதிரி வீட்ல ஒரு விஷயம் நடந்து போச்சு .
எப்பவும் புக் பண்ணி ஒரு வாரத்துலயோ இல்ல ரெண்டுவாரத்துலயோ டெலிவரி
ஆகற காஸ் சிலிண்டர் இந்த தடவை இருபது நாளாகியும் வரலை ,என்னான்னு போன் போட்ட "பழுதடைந்துள்ளது ...உபயோகத்தில் இல்லை ..நம்பர் பிஸி ...இதாங்க வருது சிலிண்டரை மட்டும் காணோம் ,சரின்னு நேர்ல போனா ஒரு அம்மா உட்கார்ந்துகிட்டு "என்னங்க பண்றது சப்ளை வந்ததும் போடறோம் ,இன்னைக்கு வந்தா இன்னைக்கே போட்ருவோம் ,இல்லனா இன்னும் ரெண்டு நாள் லேட் ஆகும்னு ஈசியா சொல்றாங்க(அவுங்களுக்கு சிலிண்டர் தட்டுப்பாடே வராது போல!!! ) ஏஜென்சி மூலமா ஒரு சிலிண்டர் விலை (முன்னூத்து நாப்பத்தி அஞ்சு ரூபாய் )
கடைசில ப்ளாக்ல அறுநூறு ரூபாய் கொடுத்து வாங்கினோம் .
என்ன பண்ண தீபா.........வ ...ளி(லி )யாச்சே ?!
கெரசின் பத்தி பேச்சே வேணாம் (பிச்சிபுடுவேன் பிச்சி ...)
லிட்டர் -முப்பத்து அஞ்சுல இருந்து அம்பது அருவதுனு இஷ்டத்துக்கு விக்கிராங்கப்பா ..என்னத்த சொல்ல ?
ஐப்பசி அடைமழைக்கு மட்டும் இல்லை போல அஸ்வினி தேவர்களுக்கும் ...காஸ் சிலிண்டர் தட்டுப்பாடுக்கும் கூட ஸ்பெஷல் தான் போல ?!!! ஐப்பசி அடைமழை சரி ...கார்த்திகை கனமழையாமே !!!
திருவாளர்.பொதுஜனங்களே உங்கள் சமத்து எதுக்கும் பாத்து யூஸ் பண்ணுங்க காஸ் சிலிண்டரையும் ...கெரசினையும்

5 comments:

said...

onnumey puriyala

said...

onnum puriyala

said...

Aipasi mathamum adai mazhayum thangalai asvini thevarkali patriyum mahabarathathai patriyum sinthika vaithu irupathu suvarasyam than. adutha murai thangaluku Gas cylinder thevaipadum pothu asvini thevarkal vanathilirunthu thangaluku thavaramal "Thathasthu" kuruvarkalaka....

anthamatil thangalai pontra kudumbathalaivikal mazhai peiyya koodathu endru asvini thevarkali vendathathil mikka makizhchiye...

said...

i said aippasi is a tamil month refered in sanskrit as asvina, it denotes asvinikumaras(the divine twins) becaz of heavy rain this month we got cylindar demand ,thatsy i wrote like this.u got it

said...

// நல்லதை மட்டுமே எந்நேரமும் நினைச்சுட்டு இருக்க முடியுமா பிரதர் ?! //

அதென்ன பிரதர்?? சிஸ்டர்க்கு எல்லாம் சொல்லமாட்டீங்களா???


அடுத்த ஐப்பசிக்கு எப்பவும் கேஸ் சிலின்டர் தீர்ந்த்குப்போகக்கூடாதுனு நினைச்க்சுகிட்டே இருங்க.. அஸ்வினி குமாரர்கள் வரும்போது ததாஸ்து சொல்லிட்டு போகட்டும்..

Followers