நிறப்பிரிகை

கதைகளுக்கும் ,கவிதைகளுக்கும் கூட நிறம் உண்டு என்பது என் நம்பிக்கை ;ஒவ்வொருகதையும் ,கவிதையுமே கூட ஏதோ ஒரு நிறத்தைப் பிரதிபலிக்கிறது என்பது நிஜம் ,எட்டாங்கிளாசில் ஹிஸ்டரி வாத்தியார் மேப் குறிக்கும் போது கடலுக்கு நீல நிறம் , நிலம் அல்லது தரைக்கு பிரவுன் நிறம் காடுகளுக்குப் பச்சை நிறம் என்று சொல்லித் தந்ததைப் போல கவிதைக்கும் நிறம் கண்டு பிடித்துக் குறிப்பிட்டால் சுவாரஷ்யமாக இருக்குமே என்று தோன்றியது ...இதோ சின்னதாக ஒரு முதல் முயற்சி ...

Monday, October 20, 2008

சொந்தமெனப்படுவது யாதெனில் ?

வெறும்
வார்த்தைகளில்
வாழ்ந்து
முடிந்து போன
காலங்கள்
ஐம்பதின் பின்
சூன்யம் உமிழ்கின்றன ...
அம்மா ...
அப்பா ...
அக்கா ...
தங்கை ...
அண்ணன் ...
தம்பி...
நெருக்கங்கள் எல்லாம்
கல்யாணமான
சிலவருடங்களில்
மெல்ல
மறைய
கூட்டு உருவங்களாம்
உறவுப் படைகள்
மனைவிக்கும்
மகனுக்கும்
மகளுக்கும்
காலநீட்டிப்பு ...
மருமகன்களும்
மருமகள்களும்
மற்றுமொரு
பாசக் கயிறாய் இறுக்கிக் கொண்டதும்
வெறும் வார்த்தைகளில்
மட்டுமேனும்
வாழ்ந்தே ஆகவேண்டிய
நிர்ப்பந்தம் ...!
யாருக்கு
யார் சொந்தமோ ?
"சொந்தமெனப் படுவது யாதெனில்
யாதொன்றும் நெருக்கமிலாதொரு பந்தமோ ?!"

0 comments:

Followers