நிறப்பிரிகை

கதைகளுக்கும் ,கவிதைகளுக்கும் கூட நிறம் உண்டு என்பது என் நம்பிக்கை ;ஒவ்வொருகதையும் ,கவிதையுமே கூட ஏதோ ஒரு நிறத்தைப் பிரதிபலிக்கிறது என்பது நிஜம் ,எட்டாங்கிளாசில் ஹிஸ்டரி வாத்தியார் மேப் குறிக்கும் போது கடலுக்கு நீல நிறம் , நிலம் அல்லது தரைக்கு பிரவுன் நிறம் காடுகளுக்குப் பச்சை நிறம் என்று சொல்லித் தந்ததைப் போல கவிதைக்கும் நிறம் கண்டு பிடித்துக் குறிப்பிட்டால் சுவாரஷ்யமாக இருக்குமே என்று தோன்றியது ...இதோ சின்னதாக ஒரு முதல் முயற்சி ...

Monday, October 6, 2008

கூழாங்கற்கள்




கூழாங்கற்கள்


ஆளில்லாக்


காடு


அசைவிலா


நெடுமரங்கள் ;


கும்மிருட்டின்


நெருக்கமாய்


புதர்ச்செடிகள் ;


சலனமின்றிப்


பாய்ந்தோடும்


சிற்றாறு ;


அதனடியில்


நெடுநாளாய்


இடம் மாறா


கூழாங்கற்கள் !?



கயல்

0 comments:

Followers