நிறப்பிரிகை

கதைகளுக்கும் ,கவிதைகளுக்கும் கூட நிறம் உண்டு என்பது என் நம்பிக்கை ;ஒவ்வொருகதையும் ,கவிதையுமே கூட ஏதோ ஒரு நிறத்தைப் பிரதிபலிக்கிறது என்பது நிஜம் ,எட்டாங்கிளாசில் ஹிஸ்டரி வாத்தியார் மேப் குறிக்கும் போது கடலுக்கு நீல நிறம் , நிலம் அல்லது தரைக்கு பிரவுன் நிறம் காடுகளுக்குப் பச்சை நிறம் என்று சொல்லித் தந்ததைப் போல கவிதைக்கும் நிறம் கண்டு பிடித்துக் குறிப்பிட்டால் சுவாரஷ்யமாக இருக்குமே என்று தோன்றியது ...இதோ சின்னதாக ஒரு முதல் முயற்சி ...

Friday, October 17, 2008

உலர்ந்தும் உலராத ஏதோ ஒரு நாள் ...!









உலராத பொழுதுகள் :-

கடற்கரையில்

உதிரும்

மணற்துகளாய்

வாழ்வின்

துயரங்களும்

என்றேனும்

உதிர்ந்தே தீரும் !

மண்

உதிர்த்து

அலை நனைக்கும்

கால்களுக்கு

துயரம்

உதிர்த்து

உலர்ந்த மனம் பெற

கடற்கரையின்

உலராத பொழுதுகளில்

நிச்சயம்

தெரிந்தே இருந்திருக்கும் ???

1 comments:

said...

anbulla kayal, ungal kavithai nanraga ullathu...vaazhkaiyil alukkavae alukka vishayangalul kadal onru...kadalai pattriya ungal kavithai nanru..thodarnthu ezhuthungal...vaazhthukkal

Followers