நிறப்பிரிகை
கதைகளுக்கும் ,கவிதைகளுக்கும் கூட நிறம் உண்டு என்பது என் நம்பிக்கை ;ஒவ்வொருகதையும் ,கவிதையுமே கூட ஏதோ ஒரு நிறத்தைப் பிரதிபலிக்கிறது என்பது நிஜம் ,எட்டாங்கிளாசில் ஹிஸ்டரி வாத்தியார் மேப் குறிக்கும் போது கடலுக்கு நீல நிறம் , நிலம் அல்லது தரைக்கு பிரவுன் நிறம் காடுகளுக்குப் பச்சை நிறம் என்று சொல்லித் தந்ததைப் போல கவிதைக்கும் நிறம் கண்டு பிடித்துக் குறிப்பிட்டால் சுவாரஷ்யமாக இருக்குமே என்று தோன்றியது ...இதோ சின்னதாக ஒரு முதல் முயற்சி ...
உலராத பொழுதுகள் :-
கடற்கரையில்
உதிரும்
மணற்துகளாய்
வாழ்வின்
துயரங்களும்
என்றேனும்
உதிர்ந்தே தீரும் !
மண்
உதிர்த்து
அலை நனைக்கும்
கால்களுக்கு
துயரம்
உதிர்த்து
உலர்ந்த மனம் பெற
கடற்கரையின்
உலராத பொழுதுகளில்
நிச்சயம்
தெரிந்தே இருந்திருக்கும் ???
1 comments:
anbulla kayal, ungal kavithai nanraga ullathu...vaazhkaiyil alukkavae alukka vishayangalul kadal onru...kadalai pattriya ungal kavithai nanru..thodarnthu ezhuthungal...vaazhthukkal
Post a Comment