நிறப்பிரிகை

கதைகளுக்கும் ,கவிதைகளுக்கும் கூட நிறம் உண்டு என்பது என் நம்பிக்கை ;ஒவ்வொருகதையும் ,கவிதையுமே கூட ஏதோ ஒரு நிறத்தைப் பிரதிபலிக்கிறது என்பது நிஜம் ,எட்டாங்கிளாசில் ஹிஸ்டரி வாத்தியார் மேப் குறிக்கும் போது கடலுக்கு நீல நிறம் , நிலம் அல்லது தரைக்கு பிரவுன் நிறம் காடுகளுக்குப் பச்சை நிறம் என்று சொல்லித் தந்ததைப் போல கவிதைக்கும் நிறம் கண்டு பிடித்துக் குறிப்பிட்டால் சுவாரஷ்யமாக இருக்குமே என்று தோன்றியது ...இதோ சின்னதாக ஒரு முதல் முயற்சி ...

Tuesday, October 21, 2008

பகிர்வு - ஈழம்

புதுசு கண்ணா புதுசுன்னு நிறையப் பேர் ப்ளாக்ல எழுதித் தள்ராங்கப்பா; நல்லாத்தான் இருக்கு ,உட்கார்ந்து யோசிப்பாங்க போல ...கொஞ்ச நேரம் முன்னாடி ஈழம் தமிழ் எம்.பி பிரேம் ராமச்சந்திரனோட இன்டெர்வியூ படிச்சேன் . என்ன பாவம் செஞ்சாங்கப்பா ஈழத்து தமிழ் மக்கள் , ஐரோப்பிய தொண்டு நிறுவனங்களை சிங்கள அரசு விரட்டின பிறகு செஞ்சிலுவைச் சங்கமும் இறந்தவர்களை அப்புறப் படுத்தும் பணிகளை மட்டும் தான் இப்போதைக்கு செய்துட்டு வருதாம் , அந்த மக்களோட ரணங்களுக்கு மருந்து போடப் போறது தான் யாரு ? நம்ம அரசியல்வாதிகள் திடீர் ஸ்டண்ட் அடிக்கறதோட சரி , ஈழத் தமிழர்கள் பத்தி பத்திரிகைகள்ல வர்ற ஒவ்வொரு படமுமே பகீர் ராகம் தான் ...கொஞ்ச நாள் முன்னாடி நோபெல் பரிசு பெற்ற ஒரு ஐரோப்பிய புகைப்படக்காரரோட புகழ் பெற்ற புகைப்படம் ஒன்றை பார்த்தேன் .

அது சூடானின் இரக்கமற்ற வறுமையை ...பஞ்சத்தை அப்பட்டமா காட்டுகிற நிஜம் . இந்தப் புகைப்படம் எடுத்து பரிசு பெற்றதுக்கு அப்புறம் அவருக்கு வாழ்க்கை மேல ஒரு பிடிப்பே இல்லாம பொய் தற்கொலை பண்ணிகிட்டாராம் .


பசியால் வாடிப் பொய் குற்றுயிராகி விட்ட ஒரு சிறுவன் வெறும் நிலத்தில் நடக்கக் கூட முடியாம மண்டியிட்டு கவிழ்ந்து கிடக்க ,அவன் எப்போதடா சாவான் அவனை இரையாக்கிக் கொள்ளலாம் என ஒரு வல்லூறு அவனுக்குப் பின்னால் காத்திருக்கிறது . இது தான் அந்தப் புகைப்படம் , இதைக் கண்டவுடன் யாருக்குமே பதட்டம் வரத்தான் செய்யும் .


இதே உணர்வை இப்போது வெளிவரும் ஈழத்துப் புகைபடங்களும் எழுப்புகின்றன,


"என்று தணியுமிந்த போர் வெறி


என்று நிமிர்வர் எம் ஈழத் தமிழர்கள் ?!"


விடை தெரியாக் கேள்வி என்று தெரிந்தே தான் என்னைப் போல பலரும் கேட்டுக் கொள்கிறோம் எங்களுக்குள்ளே .


0 comments:

Followers