நிறப்பிரிகை
கதைகளுக்கும் ,கவிதைகளுக்கும் கூட நிறம் உண்டு என்பது என் நம்பிக்கை ;ஒவ்வொருகதையும் ,கவிதையுமே கூட ஏதோ ஒரு நிறத்தைப் பிரதிபலிக்கிறது என்பது நிஜம் ,எட்டாங்கிளாசில் ஹிஸ்டரி வாத்தியார் மேப் குறிக்கும் போது கடலுக்கு நீல நிறம் , நிலம் அல்லது தரைக்கு பிரவுன் நிறம் காடுகளுக்குப் பச்சை நிறம் என்று சொல்லித் தந்ததைப் போல கவிதைக்கும் நிறம் கண்டு பிடித்துக் குறிப்பிட்டால் சுவாரஷ்யமாக இருக்குமே என்று தோன்றியது ...இதோ சின்னதாக ஒரு முதல் முயற்சி ...
சொல்லாமல் விடப்பட்ட
வார்த்தைகளின்
கணத்தில்
நசுங்கிப் போன
ஒவ்வொரு நாளையும்
தேடிக்கொண்டு
விரைவதே
வாழ்க்கை என்றானபின்
வெற்றிடமே
எங்கும் வியாபித்து
அமிழ்த்திய
உலகம் காண் ...!!!
கயல்
0 comments:
Post a Comment