நிறப்பிரிகை

கதைகளுக்கும் ,கவிதைகளுக்கும் கூட நிறம் உண்டு என்பது என் நம்பிக்கை ;ஒவ்வொருகதையும் ,கவிதையுமே கூட ஏதோ ஒரு நிறத்தைப் பிரதிபலிக்கிறது என்பது நிஜம் ,எட்டாங்கிளாசில் ஹிஸ்டரி வாத்தியார் மேப் குறிக்கும் போது கடலுக்கு நீல நிறம் , நிலம் அல்லது தரைக்கு பிரவுன் நிறம் காடுகளுக்குப் பச்சை நிறம் என்று சொல்லித் தந்ததைப் போல கவிதைக்கும் நிறம் கண்டு பிடித்துக் குறிப்பிட்டால் சுவாரஷ்யமாக இருக்குமே என்று தோன்றியது ...இதோ சின்னதாக ஒரு முதல் முயற்சி ...

Thursday, October 9, 2008

தனிமை ருசியானதே !!!





தனிமையும் ருசியானதே !!!



தனிமை ருசியானதே !!!


சில நேரங்களில்


வெகு சிற்சில நேரங்களில்


என்றேனும் ஒருநாள்


ஒரே ஒரு நாள் மாத்திரம் ;


தனிமை ருசியானதே !


அடங்காத கோபம்


சீறி அடங்கும் போது


என் தவறுகளை ஆராய


தனிமை ருசியானதே !


எப்போதோ


என்றிருந்த மழை


மெதுவாய்த் துவங்கி


மிகக் கனமாய் கவிழ்ந்து


கொட்டி முழக்கும் போது


என் சுவாரஷ்யங்களை அசை போட


தனிமை ருசியானதே !


காலவரையின்றி காத்திருந்து


எதிர்பார்த்திருந்த


உன்னத வாய்ப்புகள்


போகட்டும் விடு என உதறித் தள்ளி


ஓய்ந்திருந்த


ஒரு மத்தியான பொழுதில்


அறிவிப்பின்றி


கதவைத் தட்டி உடைக்கும் போது ;


என் அதிர்ஷ்டத்தை


எனக்கு நானே


மெச்சி ரசிக்க


தனிமை ருசியானதே !


எண்ணற்ற இழப்பின் பின்னும்


என்னை நான் கண்டுணர


ஓயாமல் முயற்சிக்கும்


ஒவ்வொரு முறையும்


உடனிருந்து பற்றிக்கொள்ள


விரல்கள் தரும் எவ்வுயிரும் அருகின்றி


நட்ட நடுச் சாமத்தில்


சுவர்கோழி கத்தும்


அமானுஷ்ய வேளையிலே


திடுக்கிட்டு விழிக்கையிலே


சில்லென்று முகத்தை


உரசிப் பரவும்


இளங்காற்றை தடங்கலின்றி


அனுபவிக்க


என்றேனும்


ஒரு நாள்


ஒரே ஒரு நாள்


மாத்திரம்


தனிமை ருசியானதே !!!



கயல் கவிதைகள்

Followers